Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பில் முகநூல் மோசடி: போலியான லண்டன் வைத்தியரிடம் ரூ. 8.37 லட்சத்தை இழந்த பெண்!

ஜூலை 23, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

மட்டக்களப்பில் முகநூல் (Facebook) மூலம் பழகிய போலியான வெளிநாட்டு வைத்தியர் ஒருவரிடம் 8 லட்சத்து 37 ஆயிரம் ரூபாயை இழந்து பெண் ஒருவர் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது பற்றி தெரியவருவதாவது, குறித்த பொலிஸ் பிரிவிலுள்ள பெண் ஒருவரின் முதநூலில் லண்டனில் உள்ள வெளிநாட்டவரான டான் என்ற வைத்தியருடன் கடந்த 13ம் திகதி இணைந்து கொண்டு நண்பர்களாகி இருவரும் முகநூல் ஊடாக கருத்து பரிமாற்றம் செய்து வந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, குறித்த பெண்ணின் கையடக்க தொலைபேசிக்கு  கடந்த 16ம் திகதி இலங்கை கட்டுநாயக்கா விமான நிலையப் பகுதியில் தம்மை பொதிகளை விநியோகிக்கும் கம்பனி என தெரிவித்து லண்டனில் இருந்து வைத்தியர் டான் என்பவர்  ஒரு பொதியை அனுப்பியுள்ளதாகவும்,   அதில் பல இலட்சம் ரூபா பெறுமதியான விலை உயர்ந்த பொருட்கள் உள்ளன. அதனை சுங்க திணைக்களத்தில் இருந்து விடுவித்து தருவதற்கு (கிளியர்) 87 ஆயிரம் ரூபா பணத்தை வங்கி கணக்கிற்கு அனுப்புமாறும் கோரியுள்ளனர்.

இதனை நம்பி அந்த பெண் 17ம் திகதி உடனடியாக 87 ஆயிரம் ரூபா அனுப்பிய பின்னர், மேலும் 3 லட்சம் தேவை என்றதும்  அந்த பெண்ணின் தாயார் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவை அந்த வங்கி கணக்கில் வைப்பில் இட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, மேலும்  மோசடி கும்பல் கணக்கில் பணம் வைப்பிலிடுமாறு கோரியதையடுத்து சந்தேகித்த அந்த பெண்  சுதாரித்து கொண்டு மோசடி கும்பலிடம் பணம் தர முடியாது என்ற பின்னர் மீண்டும் அவர்களின் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய போது, அது துண்டிக்கப்பட்டுள்ளது என பணத்தை மோசடி கும்பலிடம் இழந்த பெண் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

எனவே இவ்வாறு முகநூல் ஊடாக இணையவழி மோசடி கும்பலிடம் பலர் பல இலச்சம் ரூபா பணத்தை இழந்துள்ளதாகவும் இதனை  கருத்தில் கொண்டு தெரியாத இந்த முகநூல் மோசடிகாரர்களிடம் அவதானமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு பொலிசார் பொது மக்களிடம் கேட்டுக் கொள்கின்றனர்.

முந்தைய செய்தி கோர்டி ஹோவ் சர்வதேசப் பால ஒப்பந்த உரையை வெளியிட்ட மத்திய அரசு. – பிரதமரின் வாக்குறுதி பொய்யானதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம்
அடுத்த செய்தி தலைமன்னார் கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 9 மீனவர்களுக்கு எதிர்வரும் 6ம் திகதி வரை விளக்கமறியல்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் கைது

மே 3, 2026
இலங்கை

பேருவளையில் ஐஸ் போதைப்பொருள் மீட்பு!

டிசம்பர் 2, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நல்லூர் மற்றும் காரைநகரில் ஆட்சி அமைத்தால் சபைகளை சிறப்பாக நடத்துவோம் – சட்டத்தரணி வி. மணிவண்ணன்

மே 8, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணியில் – பெரிய எலும்பு கூட்டு தொகுதியுடன் சிறிய எலும்பு கூட்டு தொகுதி அடையாளம்!

செப்டம்பர் 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?