Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

அரசு நிர்வாகத்தில் AI தொழில்நுட்பம்: கியூபெக் – அல்பர்ட்டா மாகாணங்கள் புதிய ஒப்பந்தம்!

ஜூலை 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாட்டின் முக்கிய மாகாணங்களான கியூபெக் (Quebec) மற்றும் அல்பர்ட்டா (Alberta) ஆகியன, தங்களின் பொது அரச நிர்வாகக் கட்டமைப்பில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்துச் செயல்படுத்துவதற்கான புதிய ஐந்து ஆண்டுகால கூட்டு உடன்படிக்கை ஒன்றை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளன.

கியூபெக் மாகாணத்தின் இணையப் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சர் பிரான்ஸ்-எலைன் டுரான்சோ (France-Élaine Duranceau) மற்றும் அல்பர்ட்டா மாகாணத்தின் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் நேட் க்ளூபிஷ் (Nate Glubish) ஆகியோர் இணைந்து, இந்த கூட்டு உடன்படிக்கையை வெளியிட்டனர்.

இந்தத் திட்டத்தின் கீழ் இரு மாகாணங்களுக்கும் இடையே உடனடி நிதிப் பரிமாற்றங்கள் அல்லது நிதிசார் கடப்பாடுகள் எதுவும் இல்லை. மாறாக, அரச நிர்வாகத்தை டிஜிட்டல் மயமாக்குவதில் இரு மாகாண அரசுகளும், தங்களின் அனுபவங்கள் மற்றும் தொழில்நுட்ப அறிவைப் பகிர்ந்துகொள்வதையே இந்த ஒப்பந்தம் முதன்மையாகக் கொண்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத் துறையில் இரு மாகாணங்களுக்கும் இடையே கடந்த 2022ஆம் ஆண்டு முதல் ஆரம்பகட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இந்த உடன்படிக்கை முறைப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த கியூபெக் அமைச்சர் டுரான்சோ, பொது நிர்வாக அமைப்பை நவீனமயமாக்குவதில் அல்பர்ட்டா மாகாணம் காட்டி வரும் அதீத ஆர்வத்தையும், உயர்மட்டத் தலைமைகளின் அர்ப்பணிப்பையும் பாராட்டியுள்ளமை குறிப்பிடத் தக்கது.

முந்தைய செய்தி மொன்றியல் பீல் வீதியின் (Peel Street) ஆபத்தான தரைப்பகுதி சீரமைக்கப்படாமையால் மக்கள் அதிருப்தி
அடுத்த செய்தி யூத சமூகத்தினர் மீதான தாக்குதல்: மொன்றியல் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

பால் மா விலை அதிகரிப்பு!

ஜூலை 10, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

வடக்கு மாகாண ஆளுநரிடம் கையளிக்கப்பட்ட ‘மகாவம்ச விஜயனும் மன்னார் கட்டுக்கரை பிரதேசமும்’ என்னும் நூல்.

மார்ச் 4, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் இடம்பெற்ற புனித நோன்புப் பெருநாள் தொழுகை

மார்ச் 21, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சி மாவட்ட கட்சி அலுவலகத்தில் கருத்து தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா…

ஏப்ரல் 16, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?