யாழ்ப்பாண மாவட்ட கல்வி அபிவிருத்தி உப குழுக் கூட்டம் உபகுழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன் தலைமையில், கடற்றொழில், அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் பங்குபற்றுதலுடன் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் ஆசிரியர் பதவி வெற்றிடங்கள், நெடுந்தீவு ஆசிரியர்களுக்கான தங்குமிட வசதிகளை ஏற்படுத்தல், குறைந்த மாணவர்களை கொண்ட பாடசாலைகளை ஒன்றிணைக்கும் செயற்பாடு, பாடரீதியான ஆசிரியர்களின் தேவைப்பாடுகள், தொழில் கல்வி தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தல், சமாந்திர வகுப்பு என்பன தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டன.
இக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் மற்றும் இளைஞர்கள் விவகார அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், மாவட்ட மேலதிக செயலர் க.சிவகரன், மாகாண கல்வி பணிப்பாளர் வை. ஜெயச்சந்திரன், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், வலயக் கல்வி பணிப்பாளர்கள், கல்வித்துறையோடு தொடர்புடைய உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துக் கொண்டனர்.
