Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

கியூபெக்கில் மூடப்பட்டுள்ள  இரு முன்னணித் தனியார் கல்லூரிகள்

ஜூலை 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் உள்ள இரு முன்னணித் தனியார் கல்லூரிகள் எவ்வித முன்கூட்டிய அறிவிப்புமின்றி திடீரென மூடப்பட்டதை அடுத்து, அங்கு கல்வி கற்று வந்த நூற்றுக்கணக்கான சர்வதேச மாணவர்கள் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.

மொன்றியலில் அமைந்துள்ள ‘கொலேஜ் சுப்பீரியர் டி மொன்றியல்’ (Collège supérieur de Montréal) மற்றும் அதன் சகோதர வளாகமான ‘கொலேஜ் சுப்பீரியர் டி ஷெர்புரூக்’ (Collège supérieur de Sherbrooke) ஆகிய இரு கல்வி நிறுவனங்களுமே திடீரென மூடப்பட்டுள்ளன.

கியூபெக் மாகாண கல்வி அமைச்சு இக்கல்லூரிகளுக்கான செயல்பாட்டு அனுமதிப் பத்திரத்தை புதுப்பிக்க மறுத்தமையே, இவை மூடப்பட்டமைக்கான காரணமாகும்.

இறுதியாண்டுப் பரீட்சைகள் நடந்து கொண்டிருக்கும் வேளையிலும், பலர் தங்களது படிப்பை முடித்து தொழிற்பயிற்சிகளை (Internships) ஆரம்பிக்கவிருந்த நிலையிலும் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதால் மாணவர்கள் தங்களின் எதிர்காலம் குறித்து திகைப்படைந்துள்ளனர்.

இதனையடுத்து தங்களுக்கு முறையான தீர்வு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட மாணவர்கள் இன்று காலை மொன்றியலில் மூடப்பட்ட கல்லூரி வளாகத்திற்கு முன்பாகத் திரண்டு மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

”கல்வி அமைச்சு அனுமதிப் பத்திரத்தை புதுப்பிக்க மறுத்ததால் கல்லூரி மூடப்படுகிறது என்பதைத் தவிர நிர்வாகத் தரப்பிலிருந்து வேறு எந்தத் தகவலும் முறையாகப் பகிரப்படவில்லை” என, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் கியூபெக் அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு இக்கல்லூரிகளை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முந்தைய செய்தி  திறந்தவெளியில் தீ மூட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கிய கியூபெக் மாகாண அரசு
அடுத்த செய்தி முன்னாள் ஆடை வடிவமைப்பு நிபுணரான பீட்டர் நைகார்ட் மீதான விசாரணை ஆரம்பம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

போதைப்பொருள் கடத்தல் கும்பலின் செயற்பாடுகளை முறியடித்த பொலிஸார்

மே 5, 2026
கியூபெக்

நூற்றுக்கணக்கான பெற்றோர்களின் தனிப்பட்ட விபரங்களை கசிய விட்ட மொன்றியல் பள்ளிச்சபை

ஜூலை 3, 2026
கியூபெக்முதன்மை செய்தி

பார்ட்டி கியூபெக்வா கட்சி ஆட்சிக்கு வந்தால் வீடற்றோர் பிரச்சினையைத் தீர்ப்போம் – பால் செயிண்ட்

மே 4, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

பழைய துறைமுகத்தில் நபர் ஆற்றுக்குள் விழுந்து விபத்து: தீவிர தேடுதலுக்குப் பின் கடலோரக் காவல்படையினால் மீட்பு!

ஜூலை 13, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?