Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

கியூபெக்கில் மூடப்பட்டுள்ள  இரு முன்னணித் தனியார் கல்லூரிகள்

ஜூலை 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் உள்ள இரு முன்னணித் தனியார் கல்லூரிகள் எவ்வித முன்கூட்டிய அறிவிப்புமின்றி திடீரென மூடப்பட்டதை அடுத்து, அங்கு கல்வி கற்று வந்த நூற்றுக்கணக்கான சர்வதேச மாணவர்கள் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.

மொன்றியலில் அமைந்துள்ள ‘கொலேஜ் சுப்பீரியர் டி மொன்றியல்’ (Collège supérieur de Montréal) மற்றும் அதன் சகோதர வளாகமான ‘கொலேஜ் சுப்பீரியர் டி ஷெர்புரூக்’ (Collège supérieur de Sherbrooke) ஆகிய இரு கல்வி நிறுவனங்களுமே திடீரென மூடப்பட்டுள்ளன.

கியூபெக் மாகாண கல்வி அமைச்சு இக்கல்லூரிகளுக்கான செயல்பாட்டு அனுமதிப் பத்திரத்தை புதுப்பிக்க மறுத்தமையே, இவை மூடப்பட்டமைக்கான காரணமாகும்.

இறுதியாண்டுப் பரீட்சைகள் நடந்து கொண்டிருக்கும் வேளையிலும், பலர் தங்களது படிப்பை முடித்து தொழிற்பயிற்சிகளை (Internships) ஆரம்பிக்கவிருந்த நிலையிலும் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதால் மாணவர்கள் தங்களின் எதிர்காலம் குறித்து திகைப்படைந்துள்ளனர்.

இதனையடுத்து தங்களுக்கு முறையான தீர்வு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட மாணவர்கள் இன்று காலை மொன்றியலில் மூடப்பட்ட கல்லூரி வளாகத்திற்கு முன்பாகத் திரண்டு மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

”கல்வி அமைச்சு அனுமதிப் பத்திரத்தை புதுப்பிக்க மறுத்ததால் கல்லூரி மூடப்படுகிறது என்பதைத் தவிர நிர்வாகத் தரப்பிலிருந்து வேறு எந்தத் தகவலும் முறையாகப் பகிரப்படவில்லை” என, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் கியூபெக் அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு இக்கல்லூரிகளை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முந்தைய செய்தி  திறந்தவெளியில் தீ மூட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கிய கியூபெக் மாகாண அரசு
அடுத்த செய்தி முன்னாள் ஆடை வடிவமைப்பு நிபுணரான பீட்டர் நைகார்ட் மீதான விசாரணை ஆரம்பம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

‘டுரோஷர் அவென்யூ’ தொழிற்பேட்டைக் கட்டிடத்தை இடிக்க திட்டமிடும் தனியார் நிறுவனங்கள்

ஜூன் 22, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியலின்  ஜாக்ஸ்-கார்டியர்(Jacques Cartier) பாலத்தில் ஏறிய 2 சிறுவர்கள் கைது!

மார்ச் 3, 2025
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியலின் ‘பார்க் லா ஃபென்டைன்’ பூங்காவில் கடும் சுகாதார நெருக்கடி

மார்ச் 17, 2026
கியூபெக்முதன்மை செய்தி

நூரன் ரெஸாயி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் – 11 இளைஞர்கள் மீது குற்றச்சாட்டு

ஜூலை 1, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?