Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ள மொன்றியலின் முக்கிய மூன்று பொது மருத்துவமனைகள்

ஜூலை 14, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

மொன்றியலில் (Montreal) உள்ள மூன்று முக்கிய பொது மருத்துவமனைகளின் அவசரச் சிகிச்சைப் பிரிவுகள், தங்களின் உத்தியோகபூர்வ கொள்ளளவை விட இரண்டு மடங்குக்கும் அதிகமான நோயாளிகளின் வருகையால் கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன.

நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ள போதிலும், அவர்களுக்குச்  சிகிச்சையளிப்பதற்குப்  போதிய  எண்ணிக்கையிலான  மருத்துவர்களோ அல்லது செவிலியர்களோ இல்லை என, மொன்றியல் மருத்துவமனை வட்டாரங்கள் கவலை வெளியிட்டுள்ளன.

மொன்றியலில் உள்ள யூதப் பொது மருத்துவமனை தற்போதைய நிலவரப்படி, தன்னுடைய செயற்பாட்டு எல்லையைத் தாண்டி 242 சதவீதக் கொள்ளளவுடன் இயங்கி வருகிறது.

இதனைத் தொடர்ந்து, மெக்கில் பல்கலைக்கழக சுகாதார மையம் (MUHC) மற்றும் லேக்சோர் பொது மருத்துவமனை (Lakeshore General Hospital) ஆகிய மருத்துவமனைகளும் தங்களின் அவசரப் பிரிவுகளில் 200 சதவீதத்திற்கும் அதிகமான கொள்ளளவை எட்டியுள்ளன.

பொதுவாகக் குளிர்காலங்களிலேயே இவ்வாறான நெருக்கடி ஏற்படும் நிலையில், ஜூலை மாத கோடைகாலத்தில் அவசரப் பிரிவுகளில் இத்தனை அதிகமான நோயாளிகள் திரள்வது முன்னெப்போதும் இல்லாத அரியதொரு அசாதாரண நிகழ்வு என்று அவசரச் சிகிச்சை நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

“அவசரப் பிரிவுக்கு வரும் ஒவ்வொரு நோயாளிக்கும் தகுந்த முறையில் சிகிச்சை அளிப்பதற்கோ  அல்லது  அவர்களைக்  கவனிப்பதற்கோ  தங்களிடம் தற்போதைய சூழலில் போதிய பணியாளர்கள் இல்லை” என்று அவசரப் பிரிவு மருத்துவர் ஒருவர் ஊடகங்களிடம் கவலை தெரிவித்துள்ளார்.

கியூபெக் அவசரச் சிகிச்சை மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் (AQsep) தலைவரும், மொன்றியல் இதய நிறுவனத்தின் அவசரப் பிரிவு மருத்துவருமான டாக்டர் கில்பர்ட் புஷெர் (Dr. Gilbert Boucher) இது குறித்துக் கருத்து வெளியிடுகையில், இந்தத் திடீர் நோயாளிகள்   அதிகரிப்பிற்குப் பல காரணங்கள் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக அண்மையில் கியூபெக்கில் நிலவிய கடுமையான கோடைகால வெப்ப அலை (Heat Wave) காரணமாக, முதியவர்கள் மற்றும் பலவீனமான உடல்நிலை கொண்டவர்கள் இதயம் மற்றும் சுவாசப் பிரச்சினைகளுடன் அதிகளவில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

இதேவேளை, அவசரமற்ற சுகாதார ஆலோசனைகளைப் பெறுவதற்காகப் பொதுமக்கள் ‘811’ என்ற இலக்கத்திற்கு அழைப்பு எடுக்கும் போது, கடந்த சில வாரங்களாகப் போதிய அதிகாரிகள் இல்லாததால் மிக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் சோர்வடையும் நோயாளிகள் வேறு வழியின்றி நேரடியாக மருத்துவமனைகளின் அவசரப் பிரிவுகளை  நோக்கித்  படையெடுக்கத்  தொடங்கியுள்ளமையும், இந்த நெருக்கடி நிலைக்கு ஒரு காரணமாகக் கூறப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி “கனடாவை உடைக்காமல் வழிநடத்துங்கள்” என அல்பேர்ட்டா மக்களிடம் பிரதமர் மார்க் கார்னி உருக்கமான வேண்டுகோள்.
அடுத்த செய்தி  திறந்தவெளியில் தீ மூட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கிய கியூபெக் மாகாண அரசு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

யோர்க் (North York) பகுதியில் நடந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு

ஜூன் 23, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

மார்ச் 9, 2025
கனடாமுதன்மை செய்தி

மொன்ட்ரிய பியர்ஃபாண்ட்ஸ்-ராக்ஸ்போரோ பகுதியில் காணாம போன சிறுமி மீட்ப்பு!

நவம்பர் 18, 2025
கனடாமுதன்மை செய்தி

பழங்குடியின மக்கள் அரசிடம் கையேந்தி நிற்கிறார்கள் – ஒன்ராறியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட்

ஜூன் 19, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?