யாழ்ப்பாணத்திலிருந்து புது குடியிருப்பு நோக்கி மீன்களை ஏற்றி பயணித்த மகேந்திரா கப் ரக வாகனம் பரந்தன் வீதி ஊடாக முல்லைதீவு சென்று கொண்டிருந்த போது வெளிகண்டல் பகுதியில் இன்று (11) அதிகாலை விபத்துக்குள்ளானது.
வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் பாலத்துடன் மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் வாகன ஓட்டுனரின் உதவியாளர் சிறுகாயங்களுக்கு உள்ளான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

