அமெரிக்க அரசாங்கத்தின் நிதி முடக்கத்தின் காரணமாக, F.A.A எனும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் உத்தரவின்படி, 1,400க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் அடுத்தவருடத்திற்கான நிதியை விடுவிக்க அமெரிக்க பாராளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான அரச துறைகள் முடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, அமெரிக்க விமான போக்குவரத்தும் பாரிய இடையூறுகளை சந்தித்து வருகிறது.
வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் ஊழியர் பற்றாக்குறை காரணமாக 1400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
நேற்று சனிக்கிழமை மட்டும் 6000 விமானங்களின் பயணங்கள் தாமதமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு ஆய்வாளர்கள் உள்ளிட்ட விமான போக்குவரத்துத்துறை ஊழியர்களில் பெரும் பகுதியினர் சம்பளமில்லாத விடுமுறையில் அனுப்பப்பட்டனர்.
இதேவேளை அட்லாண்டா, டென்வர், நெவார்க், சிக்காகோ, ஹூஸ்டன், லொஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட 12 முக்கிய நகரங்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளன.
குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்கள், சம்பளமில்லாமல் தொடர்ந்து வேலைக்கு வரவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இவர்களில் பலர் உடல் நிலையைக் காரணம் காட்டி விடுமுறை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
