Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் தொடரும் இந்திய மீனவர்களின் அத்துமீறல் – என்.எம்.மொஹமட் ஆலம்

ஜூலை 11, 2026
படிக்க 3 நிமிடங்கள்
SHARE

இலங்கை கடற்பரப்பிற்குள் தொடர்ச்சியாக அத்துமீறி நுழைகின்ற இந்திய மீனவர்கள் எமது மீனவர்களின் இறங்கு துறைகளுக்குள் நுழைந்து மீன் பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்திய மீனவர்களின் அத்து மீறிய நடவடிக்கையை கட்டுப்படுத்த கடற்றொழில் அமைச்சரிடம் பல்வேறு தடவைகள் கோரிக்கைகளை முன் வைத்துள்ள போதும் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாச செயலாளர் என்.எம்.மொஹமட் ஆலம் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாசத்தில் இன்று சனிக்கிழமை(11) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் காணப்படுகின்ற பல்வேறு வகையான பிரச்சனைகள், அதேபோன்று அண்மையில் இந்திய மீனவர்கள் இலங்கை எல்லையைக் கடந்து எமது இறங்குதுறை வரைக்கும், அதாவது மீனவர்கள் மீன் பிடிக்கும் இடம் வரைக்கும் வந்த விடயங்களை நான் இந்த ஊடக வாயிலாக உரிய தரப்புக்கு தெரிவிப்பதற்காக இந்த ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்திருக்கின்றேன்.

குறிப்பாக, இந்த சட்டவிரோத மீன்பிடி முறைகள். இது தொடர்பாக பல விடயங்கள் மன்னார் மாவட்டத்திலும் வடக்கிலே காணப்பட்டாலும் மன்னார் மாவட்டத்திலே தொடர்ச்சியாக இது காணப்படுகின்றது.

2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் நிர்வாக காலப்பகுதிகளிலே இந்தத் தொழில் முறைகள் அனைத்தும் தடுக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, இலங்கை மீனவர்கள் குறிப்பாக வட பகுதி மீனவர்கள் குறிப்பிட்ட தூரம் கடலுக்குச் சென்று மீன் பிடிக்கக் கூடிய அனுமதி யை கடற்படையும் வழங்கியிருந்தது.

இருந்தபோதிலும், அந்தப் பகுதிகளில் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான அனைத்து கடல் உணவுகளையும் அறுவடை செய்து, அதன் ஊடாக கிடைக்கின்ற வருமானத்தைக் கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தை அன்றைய காலப்பகுதியிலே அவர்கள் செய்து வந்தார்கள்.

2009-க்கு பின்னர் யுத்தம் நிறைவு க்குப் பின்னர் படிப்படியாக அரசாங்கம் வேண்டிய தூரம் சென்று கடலில் நீங்கள் மீன் பிடிக்கலாம் என்று அந்த சூனியப் பிரதேசங்களை அகற்றிய பிறகு, இந்தத் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகள் எல்லை தாண்டியதாக இருக்கிறது.

டைனமட், சுருக்குவலை, இழுவைப்படகுகள் அதேபோன்று தங்கூசி கொண்டு தொழில் பிடிக்கும் முறைகள், அவ்வாறான 14 வகையான தடை செய்யப்பட்ட தொழில் முறைகளும் இப்போது இந்த வடக்குக் கடல் கடற்பரப்பிலும் அதே போன்று மன்னார் மாவட்டத்திலும் பெருவாரியாகப் பெருகியிருக்கிறது.

இதை நாங்கள் தடுப்பதற்கும் எவ்வளவு முயற்சி எடுத்தாலும், மன்னார் மாவட்டத்தில் எங்களுக்குள்ளே பதிவு செய்யப்பட்டிருக்கின்ற பல மீன்பிடி கிராமங்கள், தோறும் இந்தத் தடை செய்யப்பட்ட தொழில்களை தங்களது வாழ்வாதாரம் என்று கூறிக்கொண்டு செய்து வருகிறார்கள்.

நாங்கள் கிராமங்களைக் குறிப்பிடப்பட்டாலும், குறிப்பிடா விட்டாலும் உண்மையிலேயே யார் யார் என்ன தொழில் செய்கிறார் என்று அந்தந்த கிராமங்களுக்கு தெரியும். எனவே, இதில் நான் குறிப்பிட்டு யாரையும் குற்றம் சொல்லவோ அல்லது இந்த விடயத்தில் ஒருவரைக் குறிப்பிடவோ நான் இந்த ஊடக சந்திப்பை செய்யவில்லை.

இந்தத் தொழில்கள்… நாங்கள் தலைவர்கள் பல்வேறுபட்ட கூட்டங்களிலே பங்கு பெற்றுகின்றோம், பல மாகாண கூட்டங்களிலும் நாங்கள் பங்கு பெற்றிருக்கிறோம்.

ஆனால் குறிப்பாக, மன்னார் மாவட்டம் தொடர்ந்து பேசும்போது எங்களுக்கு சில விடயங்களை அங்கு பேசும்போது நாங்கள் தடுப்பதா அல்லது மௌனமாக இருப்பதா என்ற கேள்வியும் எழுகின்றது.

இந்தத் தடை செய்யப்பட்ட தொழில்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று பல்வேறு கட்டங்களில் பல்வேறு விதமான போராட்டங்களாக இருக்கட்டும் அல்லது பல அரசியல் தரப்புகளைச் சந்தித்து நாங்கள் மனுக்குடுத்த விடயங்கள் போன்ற பல விடயங்கள், பேசிய விடயங்கள் எல்லாம் நிறைய இருக்கின்றன.

ஆனால் அவை அனைத்துமே பலனற்று, இன்று வரை நாங்கள் 2009-ல் எப்போது கலைக்கத் துவங்கினோமோ இந்த விடயத்தை, அப்போதிலிருந்து இன்று வரைக்கும் அந்த விஷயத்தைத் தான் கதைத்துக்கொண்டிருக்கின்றோம். எனவே, ஒரு விடயமும் தீர்ந்ததாக இல்லை. பல அரசுகள் வந்து போய்விட்டன.

தற்போது கூட புதிய கடற்றொழில் அமைச்சர் பல்வேறுபட்ட கருத்துக்களைக் கூறுகின்றார். அவரை நாங்கள் பல தடவை சந்தித்து விட்டோம்.

முந்தைய செய்தி வெளிகண்டல் பகுதியில் விபத்திற்குள்ளான வாகனம் – ஒருவர் காயம்
அடுத்த செய்தி மாணவர்களிடையே சீரான போசாக்கினை கட்டி எழுப்பும் வகையிலான கண்காட்சி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

கல்வியில் மதவாதம் காட்டாதே – யாழில் போராட்டம்

செப்டம்பர் 22, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் இளங்கோ அடிகளின் நினைவு நாள்…

மே 12, 2025
இலங்கை

மட்டு ஒந்தாட்சிமடம் கடற்கரையில் கரையொதுங்கிய இந்திய ரொக்கட்டின் பாகங்கள்

ஜனவரி 4, 2026
இலங்கை

வவுனியா கூட்டுறவு பயிற்சி நிலையத்தை விடுவிக்க இராணுவம் இணக்கம்: திலகநாதன் எம்.பி

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?