Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

பலாலி இராஜேஸ்வரி அம்மனுக்கு செல்லும் பாதையை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம்

ஜூலை 8, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணம் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் காணப்படும் பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கான நிரந்தர பாதையை விடுவிக்கவும், தினமும் காலை முதல் இரவு 10 மணி வரையில் ஆலயத்திற்கு சென்று வழிபட இராணுவ தரப்பினர் இணக்கம் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி பலாலியில் இருந்து மக்கள் வெளியேறி இருந்தனர். அதனை தொடர்ந்து, கடந்த 35 வருட காலத்திற்கு மேலாக அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக உள்ளது.

இதன்படி கடந்த ஆண்டு ஜூன் மாதமளவில் குறித்த பகுதியில் உள்ள ஆலயத்திற்கு மாத்திரம் செல்வதற்கு என உயர் பாதுகாப்பு வலயத்தினுள் தனியார் காணிகள் மற்றும் வைரவர் ஆலய காணி ஆகியவற்றின் ஊடாக பிரத்தியேக பாதை அமைக்கப்பட்டு, மக்கள் ஆலயத்திற்கு மாத்திரம் சென்று வழிபட்டு திரும்ப இராணுவத்தினர் அனுமதி வழங்கி இருந்தனர்.

இந்நிலையில், ஆலயத்திற்கு தினமும் சென்று வழிபடவும் , ஆலயத்திற்கு செல்லும் வீதியின் நடுவே இராணுவத்தினரின் வாகன திருத்தகம் (கராஜ்) காணப்படுவதனாலேயே ஆலயத்திற்கு செல்ல தற்காலிக வீதி அமைக்கப்பட்டதாகவும் , அதனால் , இராணுவத்தினரின் வாகன திருத்தகத்தை அப்புறப்படுத்தி ஆலயத்திற்கு செல்லும் நிரந்தர வீதியினை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பல்வேறு தரப்பினரிடமும் கோரி வந்தனர்.

இந்நிலையில் , கடந்த மாதம் யாழ்ப்பாணம் வருகை தந்த பாதுகாப்பு அமைச்சின் பிரதி அமைச்சரிடமும் வீதி விடுவிப்பு தொடர்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் , தற்போது இராணுவத்தினர் வீதியை விடுவிக்க இணக்கம் தெரிவித்துள்ளனர்.

யாழ்.மாவட்ட இராணுவ தளபதிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனுக்கும் இடையில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே , நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை முதல் இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு செல்லும் நிரந்தர வீதியினை விடுவிப்பதாகவும், ஆலயத்திற்கு காலை முதல் இரவு 10 மணி வரையில் பக்தர்கள் சென்று வழிபாடு நடாத்த அனுமதிப்பதாகவும் இராணுவ தளபதி நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி வடக்கு மக்களின் கண் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலான புதிய திட்டம்
அடுத்த செய்தி மன்னாரில் காணி இன்றி துன்பப்படும் 35 குடும்பங்கள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

க.பொ.த. உயர்தரப் பரீட்சை; பரீட்சைத் திணைக்களத்தின் அறிவிப்பு!

செப்டம்பர் 26, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

அடையாளம் காண முடியாத நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

டிசம்பர் 7, 2025
இலங்கை

யாழ் அரியாலை பகுதியில் போராட்டம் முன்னெடுப்பு!

அக்டோபர் 8, 2025
இலங்கை

காலி சிறைச்சாலையில் தீ பரவல்!

அக்டோபர் 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?