Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வடக்கு மக்களின் கண் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலான புதிய திட்டம்

ஜூலை 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வட மாகாண மக்களின் கண் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட ‘கிராமிய வாழ்விற்கான ஒளியூட்டல் திட்டத்தின்’ யாழ் மாவட்ட அங்குரார்ப்பண நிகழ்வு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நடைபெற்றது.

யாழ்.போதனா வைத்தியசாலையின் கண் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் எம்.மலரவனால் உருவாக்கப்பட்ட இத்திட்டமானது, கிளிநொச்சி மாவட்டத்தை தொடர்ந்து யாழ் மாவட்டத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இத் திட்டத்தின் முதற் கட்டமாக சுகாதார வைத்திய அதிகாரிகள், பொதுச்சுகாதார பரிசோதகர்கள், குடும்ப நல உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கான பயிற்சிகள் வழங்கப்பட்ட நிலையில் இத்திட்டத்தில் அங்குரார்பண நிகழ்வுடன் சுகாதார அதிகாரிகளுக்கான விசேட பயிற்சிப் பட்டறையும் நடைபெற்றது.

இதன்போது யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் கண் சத்திரசிகிச்சை நிபுணர் எம்.மலரவன் திட்டத்தின் நோக்கம் மற்றும் தொழில்நுட்பக் காரணிகள் குறித்து விளக்கமளித்தார்.

இதனூடாக 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தொற்றாநோய் பரிசோதனையுடன், கண் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும். தொடர்ந்து கண் பிரச்சினைகள் உள்ளவர்கள் இனங்காணப்பட்டு அவர்களுக்கு மூக்கு கண்ணாடி மற்றும் வெண்புரை சத்திர சிகிச்சை யாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும்.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, கிராமப்புற மக்களின் கண் நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் பொருட்டு சுகாதார உத்தியோகத்தர்களுக்கான விசேட பயிற்சிப் பட்டறைகள் இரண்டு கட்டங்களாக நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் யாழ் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன், வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ப.ஜெயராணி, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி வி.பி.எஸ்.டி.பத்திரண, யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கேதீஸ்வரன், மருத்துவ நிபுணர்கள், சுகாதார அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துக் கொண்டனர்.

முந்தைய செய்தி தேசிய மக்கள் சக்தி உளவியல் போரை ஆரம்பித்துள்ளனர் – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
அடுத்த செய்தி பலாலி இராஜேஸ்வரி அம்மனுக்கு செல்லும் பாதையை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

இஸ்ரேலுக்கான விமான சேவைகள் இரத்து

மே 5, 2025
இலங்கை

வெற்று கிருமி நாசினிகளின் போத்தல்களை கொள்வனவு செய்யும் வேலை திட்டம்.

பிப்ரவரி 14, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பொலிஸாரால் 524 சந்தேகநபர்கள் கைது

பிப்ரவரி 7, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வலி. வடக்கில் இராணுவத்தின் சொகுசு பங்களாவினால் கடற்தொழிலுக்கு தடை

மே 17, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?