Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சியில் மேய்ச்சல் தரையை பெற்றுக்கொடுத்தல் தொடர்பான கலந்துரையாடல் முன்னெடுப்பு

மே 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கிளிநொச்சி மாவட்டத்தில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரையை பெற்றுக்கொடுத்தல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் மேலதிக அரசாங்கதிபர் காணி அஜிதா பிரதீபன், பிரதேச செயலாளர்கள் ,கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள மாவட்ட பிரதிப்பணிப்பாளர் எஸ். கிரியகலா, மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர் பா.தேவரதன், கிளிநொச்சி பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் கை.பிரகாஸ், பூநகரி, பளை, கண்டாவளை, கரைச்சி கால்நடை வைத்தியர்கள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் ,பண்ணையாளர் உள்ளிட்டோர்.கலந்து கொண்டனர்.

குறித்த கலந்துரையாடலில் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு சொந்தமான கால்நடைகள் மேய விடுவதற்கு அடையாளம் காணப்பட்ட இடங்களை பெற்றுக்கொடுப்பதற்கு வனஜீவராசிகள் திணைக்கள மாவட்ட உத்தியோகத்தர்கள் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறும் கூறப்பட்டுள்ளது.

இதில் நூற்றுக்கு மேற்பட்ட கால்நடை வளர்ப்போர் வனஜீவராசிகள் திணைக்களத்திடம் இருந்து குத்தகை அடிப்படையில் 49ஏக்கர் நிலத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்ற சுற்றறிக்கை காணப்படுகின்ற நிலையில் அதனை பெற்றுக்கொள்வதற்கு கால்நடை பண்ணையாளர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரணைமடுக்குளம் வான் பாய்கின்ற பகுதியில் நீர்ப்பாசன எல்லை காணியை இருபக்கமும் நூறு மீற்றர் அடையாளப்படுத்தி மேய்ச்சல் தரைக்கு ஒதுக்குமாறும் குறித்த பகுதியில் சட்டவிரோதமாக காணிகள் பிடித்திருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நீர்ப்பாசன திணைக்களத்திற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.

முந்தைய செய்தி மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்து நீடிப்பு
அடுத்த செய்தி கல்முனையில் ஓரினச்சேர்க்கையில் சிறுவர்களை ஈடுபடுத்தி வந்த வர்த்தகர் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 4 ஏப்ரல் 2025

ஏப்ரல் 4, 2025
இலங்கை

ஆரம்ப பிள்ளைப்பருவ கல்வி டிப்ளோமா கற்கைநெறி – பிரிவு II இன் ஆரம்ப விழா இன்று!

செப்டம்பர் 13, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

போதை வியாபாரியின் வாக்கு மூலத்தில் இளைஞன் கைது

ஜூன் 16, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

போராட்டத்திற்கு பணம் கொடுத்து வரவழைக்கக்கப்பட்ட இளைஞர்கள்

அக்டோபர் 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?