கூட்டுப் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவை (Permanent Joint Board on Defense) அமெரிக்கா திடீரென முடக்கியுள்ளமையைக் கண்டு கனடா ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்று, பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
இதற்குப் பாரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கியூபெக்கில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே, பிரதமர் மார்க் கார்னி இந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
நேட்டோ (NATO) அமைப்பில் கனேடிய அரசு கொடுத்துள்ள பாதுகாப்புச் செலவினங்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்காவின் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ள பிரதமர் மார்க் கார்னி, பாதுகாப்புத் துறையில் கனடா ஏற்கனவே பாரிய நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டு வருவதைச் சுட்டிக்காட்டினார்.
நேட்டோ நாடுகள் தங்களது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 2 சதவீதத்தை ராணுவத்திற்கு ஒதுக்க வேண்டும் என்ற இலக்கை கனடா ஏற்கனவே தாண்டிவிட்டதாகவும், தற்போது 2.1 சதவீதத்தை ராணுவத்திற்கு ஒதுக்கியுள்ளதாகவும் பிரதமர் கார்னி தெளிவுபடுத்தியுள்ளார்.
