நாட்டில் 36 மணித்தியாலங்களுக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு, வடமேல், ஆகிய மாகாணங்களுக்கும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகளவான மழை பெய்யுமென கூறப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வெளியில் செல்லும் போது அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
