முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வண்ணாங்குளம் பகுதியில் சூட்சுமமான முறையில் வீட்டினுள் கசிப்புக் காய்ச்சி வந்த 26 வயது இளைஞர் ஒருவர் நேற்றைய தினம்(28) முல்லைத்தீவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த இளைஞருடைய வீட்டை சோதனையிட்டபோது வீட்டிலிருந்து 10 லீற்றர் கசிப்பு மற்றும் 150 லீற்றர் கோடா என்பன கைப்பற்றப்பட்டதுடன் இதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் முல்லைத்தீவு பொலிசாரால் கைப்பற்றப்பட்டதோடு குறித்த இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்
முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.கே.சி.எஸ்.தயாவன்ச அவர்களது ஆலோசனைக்கமைய முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் அதிகாரிகளான எஸ்.ஐ.கரவிற்ற , பொலிஸ் கொன்ஸ்தபல்கள் அபே குணவர்த்தன, அபிசேக் ஆகியோர் மேற்கொண்ட குறித்த நடவடிக்கையின்போது இந்த கசிப்பு, கோடா மற்றும் அதற்கு தேவையான பொருட்கள் கைப்பற்றப்பட்டதோடு குறித்த இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞர் மேலதிக விசாரணைகளைத்தொடர்ந்து முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
