ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சு நாட்டிற்கு வருகை தரவுள்ளார். இவர் எதிர்வரும் மே மாதம் 3 ஆம் திகதியளவில் வரவுள்ளார்.
இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான நட்பை விரிவுப்படுத்துவதற்காகவும், பல்வேறு துறைகள் சார்ந்த விடயங்களை ஆராய்ந்து ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும் இந்த சந்திப்பு நிகழவுள்ளது.
இதன்படி மாலைத்தீவு குடியரசின் பாதுகாப்பு மற்றும் தேசிய சேவைகள் அமைச்சிற்கும் இலங்கையின் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று மேற்க்கொள்ளப்படவுள்ளது.
மேலும் இலங்கையின் கொழும்புப் பல்கலைக்கழகத்திற்கும் மாலைத்தீவு குடியரசின் சுகாதாரம், குடும்பம் மற்றும் நல்வாழ்வு அமைச்சுக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் மேற்க்கொள்ளப்படவுள்ளது.
சுற்றுலா துறையில் ஒத்துழைப்பை ஏற்படுத்தும் நோக்கில் மாலைதீவிற்கும் இலங்கைக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று மேற்க்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
