Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான தெளிவூட்டல் முன்னெடுப்பு

ஏப்ரல் 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில், இன்று சனிக்கிழமை(25) மன்னார் மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் சமூக மட்ட பிரதிநிதிகளுக்கு இலங்கையில் சிவில் சமூகத்தினரிடையே தற்போது பெரும் பேசுபொருளாக உள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட (PSA) வரைவு தொடர்பாகவும் ஏற்கனவே அமுலில் இருக்கும் பயங்கரவாத தடைச் சட்டம், அதனைத் தொடர்ந்து வந்த சட்டங்கள் மற்றும் தற்போது வரைபில் இருக்கின்ற PSA தொடர்பாகவும் தெளிவூட்டல் செயலமர்வு மாவட்ட செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் குறித்த தொழிவூட்டல் நிகழ்வு இடம்பெற்றது.

தற்போது அமுலில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் (PTA), மற்றும் தற்போது முன்மொழியப்பட்டுள்ள PSTB மற்றும் ஏற்கனவே முன் மொழியப் பட்டCTA (Counter Terrorism Bill) மற்றும் ATB (Anti Terrorism Bill )ஆகியவற்றின் தாக்கம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

கடந்த காலங்களில் இச் சட்டத்தினால் இலங்கை மக்கள் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து இளைஞர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த வளவாளர் சட்டத்தரணி அல்வில் அமல்ராஜ் கலந்து கொண்டு சட்ட நுணுக்கங்கள் மற்றும் அதன் சவால்கள் மற்றும் அதில் இருக்கும் ஏனைய விடயங்கள் குறித்தும் விளக்கமளித்தார்.

மெசிடோ (MSEDO) நிறுவனத்தின் ஏற்பாட்டில், UNOPS திட்டத்தின் விருத்தி கூட்டமைப்புகளின் (Viruththi) நிதி அனுசரணையில் இச் செயலமர்வு முன்னெடுக்கப்பட்டது.

சமூகத்தின் பல்வேறு தரப்பினருக்கும் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக மன்னாரில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் சமூக மட்ட பிரதிநிதிகள் உள் வாங்கப்பட்டனர்.

முந்தைய செய்தி புதுக்குடியிருப்பு பிராந்தியத்தில் 11 விற்பனை நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
அடுத்த செய்தி வவுனியா தாண்டிக்குளம் புகையிரத விபத்து – சிகிச்சை பலனின்றி முச்சக்கரவண்டி சாரதியும் உயிரிழப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

அருச்சுனா எம்.பியுடன் தர்க்கப்பட்ட பெண் ஒரு வயது குழந்தையுடன் விளக்கமறியலில்

ஏப்ரல் 26, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சியில் கடலட்டை பிடித்த 36 மீனவர்கள் கைது

மார்ச் 31, 2026
இலங்கை

சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க புதிய வேலைத்திட்டம்!

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ். பல்கலைக்கழகத்தில் பகிடிவதை – மகனுக்காக தந்தை விடுத்துள்ள கோரிக்கை

மார்ச் 31, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?