Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் பேசாலை பொலிஸ் உத்தியோகத்தரின் முகம் சுழிக்க வைக்கும் செயல்

ஏப்ரல் 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மன்னார் பேசாலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் வீதி போக்குவரத்து பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை இடை மறித்து அநாகரீகமான முறையில் நடந்து கொண்ட காணொளி சமூக ஊடகங்களில் பரவியுள்ளது.

பேசாலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு வீதி போக்குவரத்து பிரிவு போலீசார் நேற்று வெள்ளிக்கிழமை இரவு பேசாலை பொலிஸ் நிலைய பிரதான வீதியில் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதன் போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை இடைமறித்து மோட்டார் சைக்கிளுக்கான ஆவணங்கள் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் போன்றவற்றை கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் அனைத்து ஆவணங்களையும் கொடுத்த போதும், குறித்த கடமையில் ஈடுபட்ட வீதி போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் ஆவணங்களை பரிசீலித்த பின்னர் அவற்றை மீண்டும் வழங்காது தனது புத்தகத்தில் எழுத முயன்ற போது குறித்த நபர் தனது சுய பாதுகாப்பை கருத்தில் கொண்டு குறித்த வீதி போக்குவரத்து பொலிஸாரின் நடவடிக்கையை தனது கையடக்க தொலைபேசியில் வீடியோ எடுத்துள்ளார்.

இதன் போது குறித்த பொலிஸ் அதிகாரி குறித்த நபரை தாக்க முயற்சி செய்ததோடு, தகாத நடவடிக்கையில் குறித்த வீதி போக்குவரத்து பொலிஸார் ஈடுபட்டதாக குறித்த நபர் குற்றம் சுமத்தியதோடு, குறித்த இரு பொலஸாரின் நடவடிக்கைகளையும் வீடியோ எடுத்துள்ளார்.

பின்னர் ஆவணங்களை பரிசோதித்த பின்னர் பதிவு செய்து மீண்டும் வழங்கிய நிலையில் குறித்த நபர் அங்கிருந்து சென்றார்.

இதேவேளை பேசாலை பொலிஸ் நிலைய வீதியில் இரவு நேரங்களில் கடமையில் ஈடுபடுகின்ற வீதி போக்குவரத்து பொலிஸார் அவ்வீதியால் செல்பவர்களை மறித்து பணம் அல்லது மதுபான போத்தல் கேட்பதாகவும் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறித்த பொலிஸாரின் நடவடிக்கை குறித்து வன்னி பொலிஸ்மா அதிபர் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி தொழில்நுட்பக் கோளாறுகளை மக்கள் மத்தியில் தவறாகச் சித்தரிகின்றனர் – பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா
அடுத்த செய்தி 100 அடி பள்ளத்தில் வீழ்ந்த லொறி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக்கின் பொருளாதார வளங்களை பயன்படுத்த விரும்பும் டொனால்ட் ட்ரம்ப்!

மார்ச் 11, 2025
இலங்கை

மட்டக்களப்பில் தங்க ஆபரணங்கள் திருட்டு

செப்டம்பர் 14, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

காற்றாலை திட்டத்தை கைவிடாவிட்டால் போராட்டம் வலுப்பெறும் செல்வம் அடைக்கலநாதன் எச்சரிக்கை!

செப்டம்பர் 25, 2025
இலங்கை

பா.உ. கருணைநாதன் இளங்குமரனை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பு விடுப்பு(Video)

ஜனவரி 16, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?