நவீன உலகில் பன்முகத்தன்மை கொண்ட சமூகங்களுக்கிடையே பரஸ்பர மரியாதையையும், சமய சுதந்திரத்தையும் வலியுறுத்தும் நோக்கில் விசேட செயலமர்வு ஒன்று இன்று மன்னாரில் இடம்பெற்றது.
NCEASL (National Christian Evangelical Alliance of Sri Lanka) நிறுவனத்தின் அனுசரனையுடன், கிராம அபிவிருத்தி நிறுவனத்தின் (RDF) மன்னார் கிளை காரியாலயத்தின் ஏற்பாட்டில் கிராம அபிவிருத்தி நிறுவன பயிற்சி வளாகத்தில் இவ் நிகழ்வு இடம்பெற்றது.
”மதம் அல்லது நம்பிக்கை மற்றும் மத சுதந்திரம்” எனும் கருப்பொருளில் நடைபெற்ற இச்செயலமர்வில், மன்னார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தெரிவு செய்யப்பட்ட பல்லினம் சார்ந்த 35 இளைஞர் மற்றும் யுவதிகள் கலந்துகொண்டனர்.
பல்வேறு மதப் பின்னணிகளைக் கொண்ட இளைஞர் யுவதிகள், சமூக நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவது குறித்து விரிவாகக் கலந்துரையாடுவதற்கான பல்வேறு குழு செயற்பாடுகளும் இடம் பெற்றது
குறித்த நிகழ்வில் இலகுபடுத்துனர்களாக கலந்துக்கொண்ட அப்ரஜ் மர்சூக் மற்றும் மாதங்கி உதயபாலன் ஆகியோர் மத நல்லிணக்கம் தொடர்பால பல்வேறு விடயங்கள் குறித்து தெளிவான விளக்கங்களை வழங்கினர்
குறிப்பாக மத அடையாளங்களை மதித்தல் பிறரது நம்பிக்கைகளை அவமதிப்பதன் மூலம் ஏற்படும் சமூகப் பாதிப்புகள் மற்றும் அவை தனிநபர்களை எவ்வாறு மனதளவில் காயப்படுத்துகின்றன என்பது பற்றி கலந்துரையாடப்பட்டது அதே நேரம் இலங்கையின் அரசியலமைப்பில் மத சுதந்திரம் மற்றும் மத உரிமைகள் தொடர்பாகக் குறிப்பிடப்பட்டுள்ள சட்ட ரீதியான விடயங்கள் மற்றும் பாதுகாப்பு முறைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
