Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மன்னாரில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவோர்க்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – ரமேஷ் கண்ணா

பிப்ரவரி 19, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

மன்னார் பகுதியில் சமீப காலமாக சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது திணைக்களம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரமேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மீனவர்களில் தெரிவு செய்யப்பட்ட 36 மீனவர்களுக்கு மீன்பிடி வலை தொகுதி வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் வியாழக்கிழமை (19) காலை மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்களத்தில் இடம்பெற்றது.

மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் மீனவர்களுக்கு உதவித் திட்டங்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிரான கட்டுப்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மீனவர்களுக்கான புதிய வலை உபகரணங்கள் வழங்கும்போது அவை கடற்றொழில் திணைக்களத்தின் அனுமதி பெற்றவையாக இருக்க வேண்டும்.தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவதைத் தவிர்க்கும் வகையில் குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புயல் மற்றும் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு அரசாங்கம் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக ஐந்து பேர் கொண்ட ஆய்வுக் குழு அமைக்கப்பட்டு சேதங்கள் கணக்கிடப்பட்டு இழப்பீடுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மன்னார் பகுதியில் சமீப காலமாக சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் டைனமைட் (வெடிபொருள்) பயன்படுத்தி மீன் பிடித்த இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்று இரண்டு நபர்கள் வெடி பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இரண்டு இந்திய இழுவைப் படகுகள் 10 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.

சுற்றுச்சூழல் மற்றும் மீன் வளப் பாதுகாப்பு கருதி டிராக்டர் இயந்திரம் மூலம் கரைவலை இழுப்பதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.

இது குறித்து மீனவர் சங்கங்களுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் பாரம்பரிய முறையில் கைகளால் வலை இழுக்க அனுமதி உண்டு. ஆனால் இயந்திரங்கள் பயன்படுத்துவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது திணைக்களம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் .இது குறித்து மீனவ சமூகத்தினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அதிகாரி கேட்டுக்கொண்டார்.

குறித்த நிகழ்வில் மெசிடோ நிறுவனத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டதோடு, மன்னார் மாவட்டத்தில் மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 36 மீனவர்களுக்கு குறித்த வலைத்தொகுதிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி யாழ்.பல்கலை 40ஆவது பட்டமளிப்பு விழா
அடுத்த செய்தி சர்வதேச தகவல் தொழில்நுட்ப முயற்சியாண்மை மாநாட்டை நடாத்தவுள்ள வவுனியா பல்கலைக்கழகம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கைவிசேட செய்திகள்

கல்வயல் கோவிலில் பிள்ளையாரின் வெள்ளி கவசத்தை திருடியவர் கைது!

நவம்பர் 10, 2025
இலங்கை

மண்டைதீவு புதைகுழி பகுதிக்கு ஜனாதிபதி வர வேண்டும்-பிரதேச சபை உறுப்பினர் கோரிக்கை!

ஆகஸ்ட் 31, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழிற்கு எடுத்து வரப்பட்ட உலக கிண்ணம்

பிப்ரவரி 1, 2026
இலங்கை

இலங்கைக்கான கனேடிய தூதுவரை சந்தித்த தமிழ் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?