மொன்றியல் மற்றும் டொராண்டோவிலிருந்து நியூயோர்க்கின் ஜோன் எஃப். கென்னடி (JFK) சர்வதேச விமான நிலையத்திற்கான தனது விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக ஏர் கனடா (Air Canada) இன்று அறிவித்துள்ளது.
எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள பாரிய உயர்வு காரணமாகவே இந்தத் தீர்மானத்தை ஏர் கனடா (Air Canada) நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்த விமானச்சேவையின் தற்காலிக இடைநிறுத்தம் எதிர்வரும் ஜூன் மாதம் 1-ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொன்றியலில் இருந்து நாளொன்றுக்கு இயக்கப்படும் ஒரு விமான சேவையும், டொராண்டோவில் இருந்து இயக்கப்படும் மூன்று விமான சேவைகளும் இடைநிறுத்தப்படவுள்ளன.
ஈரான் – அமெரிக்க மோதல் ஆரம்பமானதில் இருந்து விமான எரிபொருள் விலை இருமடங்காக உயர்ந்துள்ளதால், லாபம் குறைந்த வழித்தடங்களில் தொடர்ந்து விமானங்களை இயக்குவது சாத்தியமற்றது என ஏர் கனடா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சுமார் ஐந்து மாத கால இடைவெளிக்குப் பிறகு, ஒக்டோபர் 25 ஆம் திகதி அன்று, மொன்றியல் மற்றும் டொராண்டோவிலிருந்து நியூயோர்க்கின் ஜோன் எஃப். கென்னடி (JFK) சர்வதேச விமான நிலையத்திற்கான இந்த விமானச் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
