ஈரானியத் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை (Naval Blockade) காலவரையறையின்றித் தொடரும் என அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) இன்று அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானின் அணுசக்தித் திட்டங்களை முடக்கும் வரை இந்தப் பொருளாதார மற்றும் இராணுவ நெருக்குதல்கள் நீடிக்கும் என பென்டகனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார். தற்போது அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே இரு வார காலப் போர்நிறுத்தம் அமுலில் உள்ள போதிலும், அமெரிக்கா தனது பிடியைத் தளர்த்தவில்லை.
ஈரானுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் அனைத்துக் கப்பல்களையும் அமெரிக்கக் கடற்படை தடுத்து நிறுத்தி வருகிறது.
இதுவரை 13 சர்வதேசக் கப்பல்கள் எச்சரிக்கப்பட்டுத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. பேச்சுவார்த்தையில் ஈரான் இணங்கி வராவிட்டால், அந்நாட்டின் மின்சாரம் மற்றும் எரிசக்தி நிலையங்கள் மீது பாரிய வான்வழித் தாக்குதல்களை நடத்தத் தயாராக உள்ளதாக ஹெக்செத் எச்சரித்துள்ளார். முற்றுகையிலிருந்து போருக்கு மாற தங்களுக்கு அதிக நேரம் எடுக்காது என அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் தெரிவித்தார்.
