Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

டெரெபோன் பாராளுமன்றத் தேர்தல் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு

ஏப்ரல் 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் அமைந்துள்ள டெரெபோன் (Terrebonne) பாராளுமன்றத் தேர்தல் தொகுதிக்கான இடைத்தேர்தல் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. கடந்த பொதுத்தேர்தலில் வெறும் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் லிபரல் கட்சி வெற்றி பெற்ற நிலையில், அந்த முடிவை, உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

அதனைத் தொடர்ந்து இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மறுதேர்தல் நடைபெறுகிறது. 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் லிபரல் வேட்பாளர் டாட்டியானா ஆகஸ்ட் (Tatiana Auguste), பிளாக் கியூபெக்வா வேட்பாளர் நத்தலி சின்க்ளெயரை விட ஒரு வாக்கு அதிகம் பெற்று வெற்றி பெற்றிருந்தார்.

தபால் மூலமான வாக்குகளைக் கையாள்வதில் தேர்தல் ஆணையம் செய்த சிறு தவறு காரணமாக ஒரு வாக்கு எண்ணப்படாமல் போனது. இதனை ஏற்றுக்கொண்ட கனடிய உயர் நீதிமன்றம், அந்தத் தேர்தல் முடிவைச் செல்லாததாக அறிவித்ததுடன் அந்த டெரெபோன் (Terrebonne) தொகுதியில் மீண்டும் தேர்தல் நடத்த உத்தரவிட்டது.

நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில், இந்தத் தொகுதியில் இடம்பெறவுள்ள இந்த இடைத்தேர்தல் மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சிக்கான பாராளுமன்ற உறுப்பினர் Marilyn Gladu லிபரல் கட்சியில் இணைந்ததையடுத்து, பிரதமர் மார்க் கார்னியின் அரசாங்கம் பெரும்பான்மை பலத்தைப் பெற இன்னும் ஒரு இடம் தேவைப்படுகின்றது.

தற்போது இந்த டெரெபோன் (Terrebonne) தொகுதியில் வெற்றி பெற்றால் லிபரல் கட்சி ஒரு நிலையான பெரும்பான்மை ஆட்சியை அமைக்கும் நடைபெறப்போவது ஒரு இடைத்தேர்தல் என்றாலும் டெரெபோன் தேர்தல் தொகுதியின் மக்கள் இதில் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஏற்கனவே நடைபெற்று முடிந்த முன்னோடி வாக்கெடுப்பில் (Advance Polls) சுமார் 18,200 பேர் வாக்களித்துள்ளனர். திங்கட்கிழமை இரவு வெளிவரவுள்ள இந்த தேர்தலின் முடிவுகள் நாட்டின் அடுத்த சில ஆண்டுகால அரசியலைத் தீர்மானிக்கும் என்பதால் நாடு முழுவதும் டெரெபோனை உற்று நோக்கிக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி வில்-மேரி சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளதாக அறிவிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

அமைச்சரவையின் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ள கிறிஸ்டின் ஃப்ரெச்செட்

ஏப்ரல் 14, 2026
1
கியூபெக்முதன்மை செய்தி

பிரெஞ்சு மொழியைப் பேச விரும்பாத கனேடியப் பிரதமர் மார்க் கார்னி..

ஏப்ரல் 8, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் CAQ கட்சித் தலைமைப் போட்டியில் முக்கியத் திருப்பம்

பிப்ரவரி 11, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கின் பிரதான குற்றவாளியான ஜீன் பிரான்சுவா மாலோ கைது

டிசம்பர் 31, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?