Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டு ஏறாவூரில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

ஏப்ரல் 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஏறாவூர் பிரதேசத்தில் போதைப் பொருள் வியாபாரி ஒருவரின் வீட்டை நேற்று வியாழக்கிழமை (09) இரவு முற்றுகையிட்ட பொலிசார் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவு கொஸ்தாப்பர் மற்றும் வியாபாரி ஒருவர் உட்பட இருவரை 6840 மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் கைது செய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசார் தெரிவித்தனர்.

மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையயடுத்து மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலீத் லீலாரெத்தினவின் ஆலோசனைக்கு அமைய மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவ தினமான நேற்று இரவு 10.00 மணியளவில் ஏறாவூர் முதலாம் பிரிவு நூலக வீதியிலுள்ள போதை பொருள் வியாபாரியின் வீட்டை முற்றுகையிட்டனர்.

இதன்போது வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வியாபரியிடம் இருந்து 5840 மில்லிக்கிராம் ஜஸ் போதை பொருளை கைப்பற்றிய நிலையில் வீட்டை சோதனையிட்ட போது மேலும் 100 மில்லிக்கிராம் ஜஸ் போதை போருளை மீட்டதுடன், அங்கு போதை வியாபாரியுடன் இருந்த வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவு கொஸ்தாப்பர் உட்பட இருவரையும் கைது செய்து ஏறாவூர் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் தடுப்பு காவலில் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துவருவதாக பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

முந்தைய செய்தி மன்னார் உயிலங்குளத்தில் இடம்பெற்ற நெல் அறுவடை வயல் விழா’
அடுத்த செய்தி வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக இடம்பெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

பாடசாலையில் பைபிள் விநியோகம் – ஆளுநர் நடவடிக்கை

மார்ச் 19, 2026
இலங்கை

புலம்பெயர்ந்துள்ள சின்னத்துரை சண்முகலிங்கம் அவர்களால் மாற்றுத்திறனாளிகளுக்கு பொங்கல் உதவி.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

வடமராட்சியில் மாமியாரை கொலை செய்த மருமகன்

மார்ச் 12, 2026
அண்மைய செய்திகள்உலகம்

இஸ்ரேல் மீது தீவிரமான போர் நடத்தப்படும் -ஈரான் எச்சரிக்கை.

ஜூலை 1, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?