முல்லைத்தீவு மாவட்டத்தின் வற்றாப்பளை கிராமத்தில் வீதியோரங்களில் மரநடுகை செய்யும் நிகழ்வு ஒன்று இன்று (9) செந்தமிழ் விழையாட்டுக்கழகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கரைதுறைபற்று பிரதேச சபை, பள்ளவெளி சனசமூக நிலையம், செந்தமிழ் விழையாட்டுக் கழகம், மாதர் சங்கம், வடக்கு மற்றும் தெற்கு கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் மகளீர் குழுக்கள் இணைந்து குறித்த நிகழ்வை முன்னெடுத்தனர்
கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஞா. யூட்சன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி மஞ்சுளாதேவி பிரதம விருந்தினராகவும் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் திருமதி இமக்குலேற்றா புஸ்பானந்தம் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டனர்.
வற்றாப்பளை மற்றும் கேப்பாபிலவு கிராம அலுவலர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், சனசமூக நிலைய உறுப்பினர்கள், செந்தமிழ் விளையாட்டு கழகத்தினர், மாதர் சங்கத்தினர், கிராம அபிவிருத்தி சங்கத்தினர், மகளீர் குழுக்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு மரநடுகை பணியில் ஈடுபட்டனர்.
