சித்திரை புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்படி கொழும்பிலிருந்து தங்கள் சொந்த இடங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு, மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.
இம்முறை 1500 பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தியுள்ளனர். அவசர தேவைக்காக 50 பேருந்துகளும் தயார் நிலையில் உள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும் இந்த காலப்பகுதியில் தடையின்றி போக்குவரத்து சேவையை வழங்க அனைத்து ஊழியர்களுக்கும் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது.
