கிளிநொச்சி கடல் எல்லையான இரணைதீவு கடற்பரப்பில் நேற்றிரவு 10 இந்திய மீனவர்களையும், ஓரு படகையும் கிளிநொச்சி கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் கைதான 10 மீனவர்களையும், இன்றையதினம் கிளிநொச்சி நீதிமன்ற நீதவான் பொன்னுத்துரை கிருஷாந்தன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்படி அம்மீனவர்களை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
