Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மீனவர்களுக்கு எரிபொருள் மானியம் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது – என்.எம்.ஆலம்

ஏப்ரல் 9, 2026
படிக்க 3 நிமிடங்கள்
SHARE

மீனவர்களுக்காக எரிபொருள் மானியத்தை ஜனாதிபதி அறிவித்துள்ளார். இது மீனவர்களாகிய எங்களுக்கு பெரும் சந்தோஷத்தை அளிக்கிறது. மேலும் வடமாகாண மீனவர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு எம்மோடு தொடர்புகளைப் பேணுவதற்கும் கடற்றொழில் அமைச்சருக்கு பொருத்தமான ஒரு இணைப்பாளரை வடமாகாணத்திற்கு நியமிக்க வேண்டும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று வியாழன் (09) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையிலே ஜனாதிபதி அவர்கள் நாடாளுமன்ற உரையின் போது, கடற்றொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் அஸ்வெசும பயனாளிகளுக்கான தற்போதைய அசாதாரண நிலை குறித்துப் பேசியிருந்தார். குறிப்பாக வளைகுடா நாடுகளில் நடக்கும் போர் நிலை காரணமாக ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு, விலை ஏற்றங்கள் மற்றும் போக்குவரத்து கட்டண உயர்வு போன்றவற்றால் மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதனடிப்படையில், மீனவர்களுக்காக லீட்டர் ஒன்றுக்கு 50 ரூபாய் என்ற விகிதத்தில் எரிபொருள் மானியத்தை ஜனாதிபதி அறிவித்துள்ளார். இது மீனவர்களாகிய எங்களுக்கு பெரும் சந்தோஷத்தை அளிக்கிறது. ஒரு மீனவனாகவும், குடும்பத் தலைவனாகவும் ஜனாதிபதியின் இந்த நடவடிக்கையை நான் பாராட்டுகிறேன்.

மன்னார் – பேசாலை மற்றும் குருநகர் துறைமுகங்கள் தொடர்பான சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அறிகிறோம். இது தொடர்பாக ஆளுநர் மற்றும் உலக வங்கி பிரதிநிதிகள் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.பேசாலை துறை முகத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆளுநருடன் பேசப்பட்டதாக தெரியவில்லை.

மன்னார் மாவட்ட மீனவ சமாசம் என்ற ரீதியில் பேசாலையில் ஒரு துறைமுகம் அமைய வேண்டும் என்பதில் நாங்கள் அக்கறையோடு இருக்கிறோம். இருப்பினும், பேசாலை மக்கள் சில விடயங்களை முன்வைத்துள்ளனர்.

அரசாங்கம் மற்றும் கடற்றொழில் அமைச்சு அந்த மக்களுடன் கலந்துரையாடி ஒரு தீர்வுக்கு வரவேண்டும். பேசாலை மக்கள் அதனை நிராகரித்தால், அதற்கு அருகிலுள்ள பகுதிகளில் ஆய்வு செய்து துறை முகத்தை அமைக்க அரசாங்கம் முன்வர வேண்டும்.

2026-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மீனவர் தொடர்பாகப் பல விடயங்கள் சுட்டிக் காட்டப்பட்டன. ஆனால், வடமாகாணத்தில் இந்த வரவு செலவுத் திட்டத்தின் கீழ் கூறப்பட்ட எந்த ஒரு செயல்பாடும் இன்றுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. வடமாகாணத்தை அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருக்கிறதோ என்று நாங்கள் நினைக்கத் தோன்றுகிறது.

இந்திய மீனவர்களின் வருகை தொடர்ந்து நீடிக்கிறது. அண்மையில் கூட நெடுந்தீவுப் பகுதியில் படகுகள் மற்றும் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு சில படகுகளைக் கைது செய்வதால் இந்தப் பிரச்சனை தீராது. அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் செயற்பட்டு, எமது கடல் எல்லைக்குள் ஒரு இந்தியப் படகும் வராதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடலட்டை பண்ணைகள் அமைக்கும் போது சில விடையங்களை கவனிக்க வேண்டும். கண்ட இடங்களில் பண்ணைகளை அமைக்காமல், அதற்குப் பொருத்தமான இடங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பண்ணைகளுக்கான அட்டை குஞ்சுகளை இயற்கையான முறையில் உற்பத்தி செய்யக்கூடிய உற்பத்தி நிலையங்களை முதலில் உருவாக்க வேண்டும்.

கடலில் இருந்து அட்டை குஞ்சுகளைப் பிடிப்பதை தவிர்க்க வேண்டும். உற்பத்தி நிலையங்களில் கிடைக்கும் குஞ்சுகளைக் கணக்கிட்டு, அதற்கேற்ப பண்ணைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்.கடற்றொழில் அமைச்சருக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கின்றோம். வடமாகாண மீனவர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு, எம்மோடு தொடர்புகளைப் பேணுவதற்கும் உங்களின் சார்பாக ஒரு பொருத்தமான இணைப்பாளரை வடமாகாணத்திற்கு நியமிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.என அவர் மேலும் தெரிவித்தார்.

முந்தைய செய்தி யாழில் இருந்து மட்டக்களப்பு நோக்கி அன்னை பூபதியின் ஊர்தி பவனி
அடுத்த செய்தி மட்டு கல்லடியில் பிரபல கசிப்பு பெண் வியாபரி 105 போத்தல் கசிப்புடன் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

2027 ஆண்டு நயினாதீவுக்கான மருத்துவ படகு வழங்கப்படும் – ஆளுநர் நா.வேதநாயகன்

அக்டோபர் 10, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பாணந்துறை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் முக்கியமான சந்தேக நபர் ஒருவர் கைது!

ஜூன் 1, 2025
இலங்கை

தலைமன்னார் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் .

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய மகா சிவராத்திரி விழா தொடர்பான கலந்துரையாடல்(Video)

பிப்ரவரி 11, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?