வவுனியா மாநகரசபையினால் நடைபாதை வியாபார நிலையங்கள் அகற்றப்பட்டுள்ளன. சித்திரை புத்தாண்டு வரவுள்ள நிலையில் மக்களிற்கு இடையூறாக காணப்பட்டு வரும் நடைபாதை வியாபார நிலையங்களை மாநகரசபை ஆணையாளர் திருமதி சி.சிவரஞ்சினியின் பணிப்பின் கீழ் வருமான பரிசோதகர் முசாதீர் தலைமையிலான குழுவினரால் குறித்த செயற்பாடானது முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா ஹொரவப்பொத்தான வீதி, சந்தை சுற்றுவட்ட வீதி, மன்னார் வீதி, புகையிரத நிலைய வீதிகளில் மக்களிற்கு இடையூறாகவும், போக்குவரத்திற்கு இடையூறாகவும் ஆக்கிரமித்து காணப்பட்ட நடைபாதை வியாபார நிலையங்களே இவ்வாறு அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
