யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலக நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
பிராந்திய அலுவலகத்தில் யாழ்.பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் மற்றும் மனித உரிமைகள் உத்தியோகத்தர் சேவியர் குமுதினி உள்ளிட்டோரை சந்தித்து , தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடினார்.
மேலும் துரையப்பா விளையாட்டரங்கில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீர வீராங்கனைகளுடன் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் பயிற்சியில் ஈடுபட்டிருந்ததுடன், வீர வீராங்கனைகள் எதிர்நோக்கும் சவால்கள் , பிரச்சினைகள் தொடர்பில் அவர்களிடம் கேட்டறிந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
