ஹோர்முஸ் நீரிணை ஊடாகக் கப்பல்கள் பயணிப்பதற்கு ஈரான் விதித்துள்ள புதிய நிபந்தனைகளுக்கு மத்தியில், இன்று சீனக் கப்பல் ஒன்று அந்தப் பகுதியைக் கடந்துச் சென்றுள்ளது.
இந்த புதிய கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், ஹோர்முஸ் நீரிணை ஊடாக சீனாவின் Egret என்ற எண்ணெய் தாங்கிக் கப்பல் மாத்திரமே பயணித்துள்ளதாகப் பதிவாகியுள்ளது.
இக்கப்பல் வழமையான கடல் வழித்தடத்தை விட ஈரானிய கடற்கரைக்கு மிக நெருக்கமான பகுதியில் பயணித்துள்ளது.
தனக்கு எதிரான போரில் ஈடுபடாத மற்றும் பகைமையற்ற நாடுகளின் கப்பல்கள் மாத்திரமே இந்த கடல் வழித்தடத்தைப் பயன்படுத்த முடியும் என ஈரான் அறிவித்துள்ளது.
இருப்பினும், அவ்வாறு பயணிப்பதற்கு ஈரான் அதிகாரிகளுடன் முன்கூட்டியே ஒருங்கிணைப்பு செய்யப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் சீனா, இந்தியா மற்றும் பனாமா ஆகிய நாடுகளுக்குச் சொந்தமான 6 கப்பல்கள் இந்த நீர்வழியைக் கடந்து சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
