கிளிநொச்சி – இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் பகுதியில் தனியார் ஒருவர் பதுக்கி வைத்திருந்த 1220 லீற்றர் பெட்ரோல் மற்றும் 530 லீற்றர் டீசல் என்பன மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக குறித்த பகுதியை சுற்றிவளைப்பு மேற்கொண்ட இராமநாதபுரம் பொலிசார் குறித்த எரிபொருளை பறிமுதல் செய்துள்ளதுடன் இந்த சம்பவத்தின் தொடர்புடைய சந்தேக நபரையும் கைது செய்துள்ளார்.
இதேவேளை, கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 247 லீற்றர் டீசலும் இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். இச் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் மற்றும் தடையப் பொருட்களை 22.03.2026 அன்று கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
