கியூபெக் மாகாண அரசுக்கு எதிரான தமது நீண்ட காலச் சட்டப் போராட்டத்தை மெக்கில் (McGill) மற்றும் கன்கோடியா (Concordia) பல்கலைக்கழகங்கள் அதிகாரப்பூர்வமாகக் கைவிட்டுள்ளன.
இப்பல்கலைக்கழகங்கள் , கியூபெக் அரசு அமுற்படுத்தியுள்ள வந்த 33% கல்விக் கட்டண உயர்வுக்கு எதிராகவே, சட்டப் போராட்டத்தை நீண்டகாலமாக நடத்தி வந்தன.
கடும் நிதிப் பற்றாக்குறை மற்றும் கியூபெக் மாகாண அரசுடன் சுமூகமான உறவைப் பேண வேண்டிய அவசியம் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, இந்த பல்கலைக்கழகங்களின் நிர்வாகபீடங்கள் தெரிவித்துள்ளன.
கியூபெக் மாகாணத்திற்கு வெளியிலிருந்து வந்து கற்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான கட்டணங்களை கியூபெக் மாகாண அரசு, உயர்த்தியிருந்தது.
“கியூபெக் மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு வெளி மாகாண மாணவர்களுக்கு மானியம் வழங்க முடியாது” என்றும், மொன்றியலில் ஆங்கிலம் பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது பிரெஞ்சு மொழியின் அழிவுக்குக் காரணமாகிறது என்றும் கியூபெக் முதல்வர் பிரான்சுவா லெகோ கருத்து தெரிவித்திருந்தார்..
இதனை எதிர்த்து 2024-ஆம் ஆண்டு முதல் இந்த வழக்குகள் நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.
