Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

டம்பளர் ரிட்ஜ் துப்பாக்கிச் சூடு தொடர்பாக தகவல் பகிராத OpenAI மீது மத்திய அரசு அதிருப்தி

பிப்ரவரி 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

டம்பளர் ரிட்ஜ் (Tumbler Ridge) பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு முன்பே, கொலையாளியின் ChatGPT கணக்கை முடக்கி வைத்த போதும், அது குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்காத OpenAI நிறுவனத்தின் மீது மத்திய அரசு கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக நேற்று ஒட்டாவாவில் நடைபெற்ற உயர்மட்டச் சந்திப்பு எவ்வித உருப்படியான முடிவும் இன்றி முடிவடைந்தது.

கடந்த 10-ஆம் திகதி, 18 வயது இளம்பெண் ஜெஸ்ஸி வான் ரூட்செலர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவரது தாய், சகோதரர் மற்றும் 5 பள்ளி மாணவர்கள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.

கொலையாளி கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதமே ChatGPT தளத்தில் வன்முறையான கருத்துக்களைப் பதிவிட்டதால் அவரது கணக்கு OpenAI நிறுவனத்தினால் முடக்கப்பட்டிருந்தது.

ஆனால், அந்தத் தகவலை OpenAI நிறுவனம் நாட்டின் காவல்துறைக்குத் தெரிவிக்கவில்லை.

இது குறித்து மத்திய அரசு எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அந்த நிறுவனம். “அப்போது அவர் பதிவிட்ட கருத்துக்கள் உடனடியாக ஒரு தாக்குதல் நடக்கும் என்பதைக் குறிக்கவில்லை” என்று கூறியுள்ளது.

இனிவரும் காலங்களில் இது போன்ற ஆபத்தான பதிவுகளை செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் கட்டாயமாக காவல்துறைக்குத் தெரிவிக்க வேண்டும் என, வலியுறுத்தும் புதிய சட்டத்தைக் கொண்டு வருவது குறித்து, தற்போது மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

முந்தைய செய்தி ஒட்டாவா மனித எச்சங்கள் 2019-ல் காணாமல் போன நபராக இருக்கும் என்ற சந்தேகத்தில் டி.என்.ஏ பரிசோதனைக்கு தீர்மானம்
அடுத்த செய்தி மன்னாரில் பல்வேறு வீதிகளுக்கான அபிவிருத்தி பணிகள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் தலைமையில் ஆரம்பித்து வைப்பு.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடாவில் தவறான செயலில் ஈடுபட்ட நபருக்கு சிறை தண்டனை.

பிப்ரவரி 3, 2025
கனடா

குழந்தைகளுக்கான பால் மா தொடர்பில் வெளியான முக்கிய எச்சரிக்கை

நவம்பர் 16, 2025
கனடாமுதன்மை செய்தி

டொரொண்டோ துப்பாக்கிசூட்டில்- ஒருவர் ஆபத்தான நிலையில்

ஆகஸ்ட் 3, 2025
கனடா

யோர்க் பிராந்தியப் பொலிஸாரால் 17 நபர்கள் கைது

டிசம்பர் 9, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?