ஒட்டாவாவின் தெற்குப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் மீதான டி.என்.ஏ (DNA) பரிசோதனை முடிவுகளுக்காக ஒட்டாவா காவல்துறை காத்திருக்கின்றது.
இந்த மனித எச்சங்கள் 2019-ஆம் ஆண்டு காணாமல் போன கோரி பால்ட்வின் (Corey Baldwin) என்பவருடையதா என்பதை உறுதிப்படுத்துவதற்காகவே, ஒட்டாவா காவல்துறை, டி.என்.ஏ (DNA) பரிசோதனை மேற்கொள்ளும் தீர்மானத்தை முன்னெடுத்தது.
கடந்த நவம்பர் மாதம் கண்டெடுக்கப்பட்ட இந்த எச்சங்கள் குறித்த விபரங்களை, ஒட்டாவா காவல்துறை அதிகாரிகள் உத்தியோகபூர்வமாக வெளியிட்டனர்.
ஒட்டாவாவின் கிரீலி (Greely) பகுதியில் உள்ள ரைட் சாலை மற்றும் ஆல்பியன் சாலை சந்திப்பிற்கு அருகில் இந்த மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன.
கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் ஒரு ஆணுடையது என்பது உறுதியாகியுள்ள நிலையில், அது பால்ட்வினுடையது தானா என்பதை உறுதிப்படுத்தும் இறுதிப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
