நாட்டில் பல்வேறு இடங்களில் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான கேள்விகள் அதிகரித்து வருகின்ற நிலையில் இது ஒரு பாதகமான சட்டம் என பலதரப்பினரும் கூறுகின்றனர்.
இந்நிலையில் வடக்கு கிழக்கு பொது அமைப்புக்களால் பயங்கரவாத தடை சட்டமும் வேண்டாம், பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமும் வேண்டாம் என வலியுறுத்தி இன்றைய தினம் சனிக்கிழமை பருத்தித்துறை பகுதியில் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
