மொன்ட்ரியல் நகரில், உயிரிழந்த ஒரு பெண்ணின் சடலத்தை ஆறு மாதங்களாகத் தனது வீட்டுச் சோபாவிலேயே வைத்திருந்த இரண்டு சகோதரர்களுக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்படாது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நுனாவிக் (Nunavik) பகுதியைச் சேர்ந்த 41 வயதான அலாசி துக்கியாபிக் (Alasie Tukkiapik) என்ற இனுவிட் (Inuk) இனப் பெண், 2023 பிப்ரவரி மாதம் பிரான்செஸ்கோ சன்சலோன் (Francesco Sansalone) என்பவரது வீட்டில் உயிரிழந்தார்.
அந்தப் பெண்ணின் மரணத்தை அதிகாரிகளுக்குத் தெரிவிக்காத சகோதரர்கள் பிரான்செஸ்கோ மற்றும் நிக்கோடெமோ, சடலத்தைச் சோபாவில் கிடத்தி அதன் மேல் ஒரு போர்வையைப் போர்த்தினர்.
சடலம் அழுகி நாற்றம் வீசாமல் இருக்க வாசனைத் திரவியங்களைத் தொடர்ந்து தெளித்து, அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் தேடி வந்தபோது அவர்களை வீட்டிற்குள் அனுமதிக்காமல் தடுத்துள்ளனர்.
2023 செப்டம்பர் மாதம் காவல்துறை நடத்திய அதிரடி சோதனையில், சோபாவில் கம்பளியால் மூடப்பட்ட நிலையில் அந்தப் பெண்ணின் சிதைந்த சடலம் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
