இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாளையத்தினம் இந்தியாவிட்கு விசேட பயணமொன்றை மேட்க்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
‘AI Impact Summit 2026’ என்ற மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதியை அழைத்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவின் நன்மைகள் உட்பட பல விடயங்கள் இம்மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ளது.
குறித்த மாநாட்டில் 20 நாடுகளின் அரச தலைவர்களும், 45-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளதுடன் தொடர்ந்து 05 நாட்கள் மாநாடு நடைபெறவுள்ளது.

