இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா.
இவர் மூன்று நாள் விஜயமாக இலங்கையில் வந்துள்ளார்.
இதன்படி தற்போதைய அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் பலரை சந்தித்து பேசவுள்ளார்.
இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இந்த விஜயம், எதிர்வரும் பெப்ரவரி 18 ஆம் திகதி வரை அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
