இலங்கையில் பெருந்தோட்ட துறை சார்ந்த மக்கள் நாட்டின் பொருளாதாராத்தை ஈட்டுவதில் முன்னின்றுள்ளனர். ஆனால் இதுவரைக்கும் அவர்களுக்குரிய கொடுப்பனவு கொடுக்கப்படாத நிலையே காணப்பட்டது.
தங்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வேண்டும் என தோட்ட தொழிலாளர்கள் வீதியில் இறங்கி போராடினர். போராட்டத்திற்கு பின்பும் அவர்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படவில்லை.
ஆட்சிக்கு வரக்கூடிய ஒவ்வொரு ஆட்சியாளர்களிடம் இது தொடர்பில் கேட்டும் அதற்கான பதில் கிடைக்கவே இல்லை.
இந்நிலையில் தற்கால அரசாங்கம் இன, மத பேதமின்றி மக்களின் தேவையை பூர்த்தி செய்து வருகின்றது. இதன்படி புதிய சம்பள முறையின் கீழ், ஒரு தொழிலாளிக்கு நாளொன்றுக்கு வழங்கப்பட்ட அடிப்படைச் சம்பளம் தற்போது 1,750 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
