பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் நகரமான ‘டம்ப்ளர் ரிட்ஜ்’ (Tumbler Ridge), இல் அமைந்துள்ள பள்ளியொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த விசாரணைகள் முடக்கி விடப்பட்டுள்ளன.
நேற்று மதியம் 1:20 மணியளவில், டம்ப்ளர் ரிட்ஜ் மேல்நிலைப் பள்ளியில் (Secondary School) துப்பாக்கிச்சூடு நடப்பதாகப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.
ஒரு பெண் அந்தப் பள்ளியின் வளாகத்தினுள் புகுந்து துப்பாக்கியால் சுட்டதில் அங்கேயே 6 பேர் உயிரிழந்தனர்.
மற்றொருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தார்.
பழுப்பு நிற கூந்தல் கொண்ட ஒரு பெண் தான் இந்தத் தாக்குதலை நடத்தியதாகப் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
அவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு பள்ளிக்குள்ளேயே உயிரிழந்து கிடந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
தாக்குதல் நடந்தபோது சுமார் 100 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தினுள் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
