சமீப காலமாக கெஹெலிய ரம்புக்வெல்ல தொடர்பான விடயங்கள் வெளி வந்துக்கொண்டிருக்கின்ற நிலையில் கெஹெலிய ரம்புக்வெல்லவின் உறவினரான பண்டார ரம்புக்வெல்ல மற்றும் தொழிலதிபர் நிமல் சிசிர குமார ஆகியோரும் கெஹெலிய ரம்புக்வெல்லவோடு கைதாகியிருந்தனர்.
இந்நிலையில் நிமல் சிசிர குமாரவிற்கும், பண்டார ரம்புக்வெல்லவிற்கும் கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணையில் செல்ல உத்தரவிட்டுள்ளது.
கெஹெலிய ரம்புக்வெல்ல சட்டவிரோதமாக சம்பாதித்ததாக கூறப்படும் ரூபாய் 740 மில்லியனுக்கும் அதிகமான நிதிமோசடிக்கு உதவிய சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இருவராலும் முன்வைக்கப்பட்ட உண்மைகளைப் பரிசீலித்த நீதிவான் தலா 5 மில்லியன் ரூபாய் ரொக்கப் பிணையில் இருவரையும் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.
இரு சந்தேக நபர்களுக்கும் வெளிநாட்டுப் பயணத் தடை விதித்திருப்பதோடு, அவர்களது கடவுச்சீட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.
