எதிர்வரும் 31 ஆம் திகதியிலிருந்து தேர்தல் பதிவு திருத்தப் பணிகள் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி தேர்தல் பதிவு திருத்தப் பணிகளின் போது கிராம அலுவலர்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் வருகை தர மாட்டார்கள் என்று கூறப்படுகின்றது.
இந்நிலையில் தங்கள் வசிப்பிடங்களில் ஏதேனும் மாற்றம் செய்த நபர்கள் அந்தந்தப் பகுதிக்குரிய கிராம சேவை உத்தியோகத்தரிடம் நேரில் தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
