உள்ளூராட்சி சபைகளின் செயற்பாடுகள் மற்றும் அதன் சட்டதிட்டங்கள், தொடர்பாக புதிதாக தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி உறுப்பினர்களிற்கான இருநாள் பயிற்சிபட்டறை ஒன்று இடம்பெற்றிருந்தது.
குறித்த கருத்தரங்கில் வவுனியா, மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களில், 2025ஆம் ஆண்டு முதல் தடவையாக உள்ளூராட்சி உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண் உறுப்பினர்களுக்கான இரண்டு நாட்கள் வதிவிட செயலமர்வாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த செயலமர்வானது வவுனியாவில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றிருந்தது.
யுனோப்ஸ் நிறுவனத்தின் விருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் நிதியுதவியின் கீழ் வெக்கோட் நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட இவ் அமர்வில் வொக்கோட் நிறுவனத்தின் பணிப்பாளர் தர்மலிங்கம் கணேஷ் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
