டொராண்டோ நகரின் பூங்காக்களில் அமைக்கப்பட்டிருந்த வீடற்றவர்களின் கூடாரங்கள் கடந்த ஓராண்டில் கணிசமாகக் குறைந்துள்ளதாக டொராண்டோ மாநகராட்சியின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 107 பூங்காக்களில் சுமார் 539 பேர் கூடாரங்களில் வசித்து வந்தனர்.
ஆனால், 2025 டிசம்பர் நிலவரப்படி, இந்த எண்ணிக்கை 196 ஆகக் குறைந்துள்ளது.
தற்போது 48 பூங்காக்களில் மட்டுமே கூடாரங்கள் காணப்படுகின்றன.
இருப்பினும், இது ஒரு “கண்ணுக்குத் தெரியாத நெருக்கடி” என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
டொராண்டோ மாநகராட்சி முன்னெடுத்துள்ள சில முக்கிய நடவடிக்கைகள் இதற்குக் காரணமாகக் கூறப்படுகின்றன.
