டிட்வா புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் ஒவ்வொரு பகுதியிலுள்ள இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இதன்படி தலவாக்கலை, கிறேட்வெஸ்டன் பாடசாலை இடைத்தங்கல் முகாமிலும் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர்கள் அவ்விடத்திலிருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குச் சொந்தமான கிறேட்வெஸ்டன் தோட்டத்திலுள்ள கிறேட்வெஸ்டன் தமிழ் மகா வித்தியாலயத்தில் 67 குடும்பங்களைச் சேர்ந்த 270 உறுப்பினர்கள் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
தற்போது கிறேட்வெஸ்டன் தோட்டத்தில் பெரிய அளவில் அபாய நிலையில் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், நாளை பாடசாலைகள் (05) ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்று (4) தற்காலிக முகாமில் இருந்து மக்கள் வெளியேறிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


