கியூபெக் மாகாணத்தின் ‘மாரிசி’ (Mauricie) பகுதியில் உள்ள பழமையான மற்றும் அபூர்வமான காடு ஒன்றில், சாலை அமைக்கும் பணிகளுக்கு மாகாண அரசு அனுமதி அளித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஒருபுறம் இந்தக் காட்டைப் ‘பாதுகாக்கப்பட்ட பகுதி’யாக அறிவிக்க அரசு ஆலோசித்து வரும் நிலையில், மறுபுறம் அங்கேயே மரங்களை வெட்டுவதற்கான முதற்கட்டப் பணிகளுக்கு அனுமதி வழங்கியது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஷாவினிகன் (Shawinigan) நகருக்கு அருகே அமைந்துள்ள இந்தக் காடு, பல நூற்றாண்டுகளாக மனிதத் தலையீடு இன்றி வளர்ந்த “முதுபெரும் காடு” (Old-growth forest) ஆகும்.
இங்குள்ள செந்நிற ஸ்ப்ரூஸ் (Red Spruce) மரங்கள் கியூபெக்கின் உயிர்சூழலுக்கு மிக முக்கியமானவை என்று கருதப்படுகின்றது.
இந்த விவகாரத்தில் கியூபெக் அரசு எடுத்துள்ள முடிவு முரண்பாடாக உள்ளதாகச் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.


