இயற்கை அனர்த்தம் என்பது கடவுளால் தரும் அழிவு அல்ல. எம் வாழ்க்கையை மீட்டுப் பார்க தரும் சந்தர்ப்பம் என பேராயர் வே பத்தயாளன் தெரிவித்துள்ளார்.கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற ஒன்றிணைந்த நத்தார் இன்னிசை வழிபாட்டில் கலந்து கொண்டு இறை செய்தி வழங்கிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தென்னிந்திய திருச்சபை வன்னிப் பிராந்திய திருச்சபைகளை ஒன்றிணைத்து நத்தார் இன்னிசை வழிபாடு இன்று கிளிநொச்சியில் நடைபெற்றது.குறித்த வழிபாட்டில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள திருச்சபைகள் இணைந்து நத்தார் கீதம் இசைத்து வழிபாடு நடைபெற்றது.
இதன் போது, பிரதம விருந்தினராக கலந்து கொண்டு இறை செய்தி வழங்கிய பேராயர் இயற்றை இடரால் பாதிக்கப்பட்ட மக்களிக்கும், விசுவாசிகளிற்கும் நத்தார் செய்தியை வழங்கினார்.இயற்கை அனர்த்தம் என்பது கடவுளால் தரும் அழிவு அல்ல. எம் வாழ்க்கையை மீட்டுப் பார்க தரும் சந்தர்ப்பம் இதுவாகும்.
இவ்வாறான பேரிடர்கள், அழிவுகள் கடவுளால் கொடுக்கப்படும் தண்டனை அல்ல. கடவுள் இவ்வாறான சம்பவங்கள் மூலம் அழிப்பவர் அல்ல.ஆனால், பேரிடர்கள், இயற்கை அனர்த்தங்கள் மூலம் எமது வாழ்வை மீட்டுப் பார்க்க சந்தர்ப்பங்களை ஏற்படுத்துகிறார்.
தனி மனித செயற்பாடுகள், சிந்தனைகளில் மாற்றங்களை ஏற்படுத்தவும், கடந்த கால செயற்பாடுகளை மீட்டுப் பார்க்கவும் இவ்வாறான அனர்த்தங்களை அனுமதிக்கின்றார்.இந்த கிறிஸ்மஸ் காலங்களில் எம்மை நாமே மீட்டிப் பார்த்து, கடவுளுக்கு எற்ற பிள்ளைகளாக மாற்றம் செய்து வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.
கடவுள் ஒரு போதும் எம்மை அழிப்பவர் அல்ல. எம்மை வாழ வைக்கவே இப் பூவுலகில் மனிதராக பிறந்தார். அந்த கடவுளிற்கு ஏற்றவாறு எம்மை மாற்றிக் கொண்டு வாழ வேண்டும்.
அதற்கு ஏற்ப நாம் நம்மை மீட்டுப் பார்க்க வேண்டும். கடவுள் விரும்பும் மானிடராக வாழ்வோம் என அவர் தனது செய்தியில் குறிப்பிட்டார்.

