இஸ்ரேலுடனான நீண்டகால போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, தங்களது ஆயுதங்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது குறித்துப் பேசுவதற்குத் தயாராக இருப்பதாகப் ஹமாஸின் மூத்த தலைவர் ஒருவர் சமிக்ஞை அளித்துள்ளார்.
இருப்பினும், ஆயுதங்களை நிரந்தரமாக கையளிக்க வேண்டும் (Disarmament) என்ற கோரிக்கையை ஹமாஸ் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. ஒரு சுதந்திமான பாலஸ்தீனிய அரசை அமைப்பதற்கான ஒரு விரிவான அரசியல் உடன்பாடு எட்டப்பட்டால், ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரையிலான ஒரு குறிப்பிட்ட போர் நிறுத்த காலத்தில் தமது ஆயுதங்களைப் பயன்படுத்தாமல் இருப்பதற்கு ஹமாஸ் உடன்பட்டுள்ளது.
சர்வதேச நிலைப்படுத்தல் படையானது, எல்லைகளைக் கண்காணிப்பதற்கும் போர் நிறுத்தத்தை உறுதி செய்வதற்கும் பயன்படுத்தப் படவுள்ளதுடன் இதற்கு ஹமாஸ் ஆதரவளித்துள்ளது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வராத வரையிலும், முழு இறையாண்மை கொண்ட பாலஸ்தீனிய அரசு நிறுவப்படாத வரையிலும்,
தான் நிராயுதபாணியாக வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது என்பதில் ஹமாஸ் உறுதியாக உள்ளது.
