நாட்டின் நான்கு மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மூன்றாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தேசியக் கட்டிடம் மற்றும் ஆராய்ச்சி நிலையம் மண்சரிவு எச்சரிக்கை நாளை மாலை 4.00 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவித்துள்ளது.
அதன்படி, மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ள பகுதிகளாவன,
கண்டி மாவட்டம் – ஹதரலியத்த, யட்டிநுவர, உடதும்பர, பதஹேவஹெட்ட, மெடதும்பர, பஸ்பகே கோரளே, தெல்தோட்டை, பூஜபிட்டிய, கங்கா இஹல கோரளே, பன்வில, காங்காவட கோரளே, உடபலாத, ஹரிஸ்பத்துவ, குண்டசாலை, மினிபே, தொலுவ, தும்பானே, அக்குரன, உடநுவர, பதடும்பர மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.
கேகாலை மாவட்டம் – கேகாலை, கலிகமுவ, மாவனெல்ல, புலத்கொஹுபிட்டி, அரநாயக்க, யட்டியாந்தோட்டை, றம்புக்கன, வரக்காபொல மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.
குருநாகல் மாவட்டம் – மாவத்தகட, மல்லவபிட்டி,ரிதிகம மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.
மாத்தளை மாவட்டம் – நாவுல, வில்கமுவ, பல்லேபொல, அம்பங்கங்க, கோரளே, லக்கல பல்லேகம, உக்குவெல, ரத்தோட்டை, மாத்தளை, யடவத்த மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.


