சீரற்ற வானிலையால் அனர்த்தத்திற்குள்ளான தொழில்துறைகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக, அத்துறைகள் தொடர்பான தரவுகளை டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட தகவல்களைப் பின்வரும் இணையதளங்கள் மூலம் உள்ளிட முடியும்.
www.industry.gov.lk அல்லது https://aid.floodsupport.org/business-impact ஊடாக உள்ளிட முடியும்
அதேபோன்று, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தொழில்துறைகள் குறித்து அறிவிப்பதற்காக “0712666660” என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சேதமடைந்த தொழில்துறையாளர்கள் அனைவரும், குறித்த தரவு அமைப்பிற்குத் தேவையான தகவல்களை முடிந்தவரை விரைவில் வழங்குமாறு அமைச்சு கோரிக்கை விடுக்கிறது.
